முல்லா ஓமர் பிடிபட்டார்?
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
தாலிபான் படை தலைவர் முல்லா ஓமர், புஸ்தூன் இன பழங்குடியினரிடம் பிடிபட்டுள்ளதாக பிரிட்டன் பத்திரிக்கைசெய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அவரை கர்சாய் தலைமையிலான அரசிடன் ஒப்படைக்க அவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிகிறது.இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
லேடனும் விரைவில் சிக்குவார்:
அதே போல பின் லேடனும் விரைவில் பழங்குடிகளிடம் சிக்குவார் என எதிர்பார்ப்பதாக நார்த்தர்ன் அலையன்ஸ்படையினர் தெரிவித்துள்ளனர்.
பின் லேடன் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியிருக்கலாம் என பழங்குடிகள்கருதுகின்றனர். அவரை தேடும் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்தப் பழங்குடிப் படைகளிடம்ஒரு அல்-கொய்தா தீவிரவாதி பிடிபட்டான். அவன் அளித்த தகவலின்படி, ஒசாமா இந்த மலைப் பகுதியில் தான்வசித்து வருவது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications