மாணவர்களை விடுவிக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை
சென்னை:
மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் கைதான 35 மாணவர்களை விடுவிக்குமாறுவழக்கறிஞர்கள் குழு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மோதலில் 35 சட்டக்கல்லூரி மாணவர்கள் கைதானதையடுத்து, இன்று வழக்கறிஞர்கள் கூட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. தமிழக அரசுக்கு வழக்கறிஞர்கள் குழு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:
மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ் அதிகாரிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரதுஉத்தரவிட வேண்டும்.
மேலும் மாணவர்களுக்கு இன்னும் சிறிது நாளில் தேர்வு நடைபெற உள்ளது. அந்த தேர்வை மறு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும்.
கைதான 35 மாணவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு, வழக்கறிஞர்கள் குழுகோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே, தேர்வுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், சக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பது சட்டக் கல்லூரி மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications