தமிழக கவர்னராகிறார் முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர்
சென்னை:
தமிழகத்தின் புதிய கவர்னராக முன்னாள் சிபிஐ இயக்குனர் ஷியாம்லால் தத்தா நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழக கவர்னர் பதவி காலியாக உள்ளது. ஆந்திர மாநில கவர்னராக உள்ள ரங்கராஜன் கூடுதல் பொறுப்பாக தமிழக கவர்னர்பதவியையும் வகித்து வருகிறார்.
ஆனால் இந்தப் பணி சுமையாக உள்ளதாக அவர் மத்திய அரசுக்கு பலமுறை எடுத்துக் கூறியுள்ளார். புதிய கவர்னரை விரைவில்நியமிக்கும்படி அவர் கோரி வருகிறார்.
இந் நிலையில் தமிழக கவர்னரை நியமிப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. தற்போது கவர்னரை முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ன்னாள் சிபிஐ இயக்குனரான ஷியாம் லால் தத்தாவை தமிழக கவர்னராக நியமிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான ஷியாம் லால் தத்தாவின் நியமனம் குறித்து பிரதமர் வாஜ்பாய் ஜப்பானிலிருந்து திரும்பிய பின்அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.