தர்மாஸ்பத்திரியில் கட்டணம் கேட்ட ஊழியருக்கு தர்ம அடி
சென்னை:
சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரூ. 5 கட்டணம் செலுத்தச் சொன்ன மருத்துவமனை ஊழியரைநோயாளி தாக்கினார். இயைடுத்து அந்த நோயாளி கைது செய்யப்பட்டார்.
சென்னை புறநகரான போரூரைச் சேர்ந்தவர் நந்தா. இவர் ஒரு பெயிண்டர். இவர் பெயிண்ட் அடிக்கும் பணியில்ஈடுபட்டிருந்தபோது தலையில் அடிபட்டது. ரத்தம் சொட்ட சொட்ட சிகிச்சைக்காக பொது மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்.
அப்போது சிறப்பு சிகிச்சைக்கான வார்டில் சேர வேண்டுமானால் அரசு உத்தரவுப்படி ரூ. 5 கட்டணம் செலுத்த வேண்டும்என்று மருத்துவமனை ஊழியர் மாணிக்கம் கூறியுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று நந்தா கூறவே அவரை உள்ளேஅனுமதிக்க முடியாது என்று மாணிக்கம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நந்தா, மேசை மேல் வைக்கப்பட்டிருந்த டேபிள் வெயிட்டை எடுத்து மாணிக்கத்தின் தலையில் ஓங்கிஅடித்தார். இதில் மாணிக்கத்தின் தலை உடைந்து ரத்தம் வந்தது.
மாணிக்கம் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நந்தாவும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைமுடிந்தவுடன் அவரை போலீஸார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.