For Quick Alerts
For Daily Alerts
Just In
இலங்கை: புலிகள் தாக்கி ஒரு ராணுவ அதிகாரி பலி
கொழும்பு:
இலங்கையின் மட்டகளப்பு பகுதியில் விடுதலைப்புலிகள் தாக்கியதில் ஒரு ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்.
மட்டக்களப்பு பகுதி இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அதன் எல்லையோரப்பகுதிகள்விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.
இதற்கிடையே திரிகோணமலைப் பகுதியில் ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மூன்றுவிடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு கையெறி குண்டையும், இரண்டுதுப்பாக்கிகளையும் ராணுவத்தினர் கைப்பற்றினர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]