அட்வகேட் கமிஷன் அமைக்க சட்டக் கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் ரத்தக் கறை படிந்திருப்பதை நேரில் வந்து பார்த்து விசாரிக்க அட்வகேட்கமிஷன் ஒன்றை நியமிக்க வேண்டும் என்று கோரி விஜயன் என்ற சட்டக் கல்லூரி மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ள அம்மனுவில் விஜயன் கூறியுள்ளதாவது:

கடந்த வெள்ளிக்கிழமை (டிச.7) நள்ளிரவுக்கு மேல் சட்டக் கல்லூரி மாணவர் விடுதிக்குள் திடீரென்று நுழைந்தபோலீசார், அங்கிருந்த மாணவர்கள் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தனர்.

மாணவர்களைத் தாக்கியதோடு நில்லாமல், அவர்களுடைய சான்றிதழ்களையும் போலீசார் கிழித்தெறிந்துள்ளனர்.

இதில் 23 மாணவர்கள் காயமடைந்தனர். விடுதி வளாகம் முழுவதும் ஏராளமான ரத்தக் கறைகள் இன்னும்காணப்படுகின்றன.

எனவே இதுகுறித்து விசாரிப்பதற்காக அட்வகேட் கமிஷன் ஒன்றை நியமிக்க உத்தரவிட வேண்டும்.

மேலும், தற்போது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு தனியார்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில் கூறியுள்ளார்விஜயன்.

இதேபோல் சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை போலீசார் உடனடியாக வாபஸ்பெற வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர். கருப்பன் மனுதாக்கல் செய்துள்ளார்.

இம்மனுக்கள் இன்று பிற்பகல் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+