"தமிழில்தான் சாப்ட்வேர் தயாரிப்பு அதிகம்"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்தியாவில் தமிழ் மொழியில் தான் அதிக அளவில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர்கள் தயாரிக்கப்படுவதாக அண்ணாபல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தெவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நடந்த தமிழ் கம்ப்யூட்டர் துறை குறித்த மாநாட்டில் அவர் பேசுகையில்,
கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் உலகில் தமிழ் சாப்ட்வேர் தான் நம் நாட்டிலேயே முன்னணியில் இருக்கிறது.நாட்டிலேயே அதிக அளவில் தமிழ் மொழியில்தான் சாப்ட்வேர்கள் தயாரிக்கப்படுகின்றது.
பயன்பாட்டு சாப்ட்வேர் பொருட்களைத் தயாரிப்பதில் தமிழர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதும்,அதற்கேற்ப தமிழ் மொழி இருப்பதுமே இதற்குக் காரணம்.
தமிழ் மொழியில், கம்ப்யூட்டர்களில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஆசியர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications