For Daily Alerts
Just In
எழும்பூர்-தாம்பரம் அகல ரயில் பாதை தயார்
சென்னை:
சென்னை எழும்பூர்-தாம்பரம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் வெள்ளோட்டம்சனிக்கிழமை நடந்தது.
சென்னை எழும்பூலிருந்து மீட்டர் கேஜ் பாதையில்தான் இதுவரை தாம்பரம் வரை புறநகர் மின்சார ரயில்கள்இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் நெரிசல் அதிகம் இருப்பதால் அகல ரயில் பாதை அமைக்க முடிவுசெய்யப்பட்டது.
அகல ரயில் பாதை அமைந்தால் கூடுதல் பயணிகள் ரயிலை இயக்க முடியும் என்பதால் இந்த அகல ரயில் பாதைஅமைக்கும் பணி வேகமாக நடந்து வந்தது.
தற்போது அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்து விட்டது. இதையடுத்து சனிக்கிழமை இந்தப் பாதையில்ரயில்களை இயக்கி வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. அகல ரயில் பாதையில் எழும்பூலிருந்து தாம்பரத்திற்கு பயணநேரம் 45 நமிடங்களாகும்.
அடுத்த வாரம் முதல் இந்த அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]