புதிய கமிஷனரானார் விஜயகுமார்
சென்னை:
சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கே. விஜயகுமார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நியமிக்கப்பட்டார்.
சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த முத்துக்கருப்பன் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அவருக்குப்பதிலாக, தற்போது சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படை ஐ.ஜியானவிஜயகுமார் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு சுமார் 07.30 மணியளவில் புதிய சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக விஜயகுமார்பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தார் முத்துக்கருப்பன்.
புதிய கமிஷனர் விஜயகுமார், கடந்த அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பளித்த கறுப்புப்பூனைப் படைக்குத் தலைமை வகித்தார். பின்னர் திமுக ஆட்சியின்போது மத்தியப் பணிக்கு மாற்றப்பட்டு, எல்லைப்பாதுகாப்புப் படையில் பணியாற்றினார்.
பின்னர் கடந்த மே மாதம் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் அதிரடிப்படை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார்.இதனால் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் மட்டுமின்றி, முன்னாள் டிஜிபி தேவாரத்தின்அன்புக்குரிய சிஷ்யர்தான் விஜயகுமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை நகரில் ரவுடிகளை ஒழிப்பதே தனது முதல் வேலை என்று கூறியுள்ளார் விஜயகுமார். மேலும்,பத்திரிக்கையாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நல்லுறவு நீடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்அவர் கூறியுள்ளார்.