For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகர்கோவிலில் வாட்ச்மேன் கொலை: பணம் கொள்ளை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாகர்கோவிலில் வாட்ச்மேனைக் கொன்று விட்டு லாரி பார்சல் நிறுவனத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் தொலைபேசி இணைப்பகம் அருகே கணபதி லாரி சர்வீஸஸ் என்ற நிறுவனம் உள்ளது. இந்தநிறுவனத்தில் வாட்ச்மேனாக இருந்தவர் நாகலிங்கம். இவருக்கு மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர்.

வழக்கம் போல வெள்ளிக்கிழமை காலை நாகலிங்கம் வேலைக்குச் சென்றார். ஆனால் மாலையில் வீடுதிரும்பவில்லை. நள்ளிரவு ஆகியும் அவர் வராத காரணத்தால், அவரது மனைவி சனிக்கிழமை அதிகாலை லாரிசர்வீஸ் நிறுவனத்திற்குச் சென்றார்.

அங்கு லாரி ஷெட்டின் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார் நாகலிங்கம்.

இதையடுத்து போலீசாாருக்குத் தகவல் தெவிக்கப்பட்டது. நாகலிங்கத்தை சிலர் கொலை செய்து விட்டுநிறுவனத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக போலீசார் தெவித்துள்ளனர்.

இந்த கொள்ளையைப் பற்றி நாகர் கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X