போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் 4000 பேர்: "திடுக்" தகவல்
சேலம்:
தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 4000 பேர் போலி சாதி சான்றிழ் கொடுத்து மத்திய, மாநிலஅரசு பதவி வகிக்கின்றனர் என்று தேசிய எஸ்.சி., எஸ்.டி. நலத்துறை ஆணைய இயக்குனர் கண்ணகி பாக்யநாதன்தெரிவித்தார்.
இது குறித்து சேலத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகள், பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள்போன்றவை ஆய்வு செய்யப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் மட்டும் 368 பேர் எஸ்.சி., எஸ்.டி., போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில்சேர்ந்துள்ளனர். தமிழகம் முழுவதும் நாலாயிரம் பேர் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து மாநில மற்றும் மத்தியஅரசு பணியில் சேர்ந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் போலி சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது வரை ஏழு பேர்பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 26 பேர் மீது விசாரணை நடந்து வருகிறது. நீதிமன்றத்தில் 93 வழக்குகள்உள்ளன. 235 பேரிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை நடந்து வருகிறது.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள், அப்பீல் செய்துவிட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களின்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் வகிக்கும் பதவியோடு அனைத்து தகுதிகளையும் இழப்பார்கள்.
இந்த கொடுமைகளை கண்டறியவும், நிகழாமல் தடுக்கவும் தனி நீதிபதி தலைமையில் கமிஷன அமைக்கபரிந்துரைக்கப் பட்டுள்ளது.
இது போல போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து பலர் அரசு வேலை வாய்ப்பை பெறுவதால், உண்மையானஆதிதிராவிட பழங்குடியினத்தவர்க்கு அரசு சலுகைகள் பறிக்கப்பட்டு வருகிறது. பழங்குடியினருக்கான அரசுசலுகைகள் அனைத்தும், அதே சமுதாயத்தை சேர்ந்த புரோக்கர்களால் சூறையாடப்படுகிறது.
இந்த நிலை தவிர்க்கப்படவும், அது போன்ற நபர்களை கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுஎன்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications