For Daily Alerts
Just In
இன்று புதுவை துணை சபாநாயகர் தேர்தல்
சென்னை:
பாண்டிச்சேரி சட்டசபை துணை சபாநாயகர் தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
பாண்டிச்சேரி சட்டசபை துணை சபாநாயகராக இருந்து வந்த சந்திரகாசு இப்போது அமைச்சராகி விட்டார்.இதையடுத்து துணை சபாநாயகர் பதவி காலியாக உள்ளது. அந்தப் பதவிக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல்நடக்கவுள்ளது.
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஏ.வி. சுப்ரமணியம்போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை நேற்று சட்டசபை செயலாளர் சிவப்பிரகாசம் முன்பு தாக்கல்செய்தார்.
அவரது மனுவை முதல்வர் ரங்கசாமி முன்மொழிந்தார். முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் வழிமொழிந்தார்.
போட்டி இருக்காது என்பதால் சுப்ரமணியம் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிகிறது. போட்டி இருந்தால் இன்றுதேர்தல் நடக்கும்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]