என்ஜீனியர் வீட்டில் ரூ.2 லட்சம் முகமூடிக் கொள்ளை
சென்னை:
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் என்ஜீனியராக பணியாற்றுபவரின் வீட்டில் முகமூடிக் கொள்ளையர்கள் புகுந்துரூ.2 லட்சம் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
சென்னையை அடுத்து உள்ளது கொளத்தூர். இங்குள்ள ஜெயராம் நகரில் வசித்து வருபவர் கேசவன். இவர் பாரத்பெட்ரோலிய நிறுவனத்தில் என்ஜீனியராக பணியாற்றி வருகிறார். கேசவன் தனது மனைவி குழந்தையுடன் வசித்துவருகிறார்.
நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை அவரது வீட்டுக்குள் புகுந்த சில முகமூடிக் கொள்ளையர்கள் கேசவனையும்,அவரது மனைவியையும் கட்டிப் போட்டனர்.
பின்னர் வீட்டில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள், கேசவனின் மனைவி மணிமேகலை அணிந்திருந்தநகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். கேசவனின் செல்போனையும் அபகரித்துக் கொண்டு அங்கிருந்துதப்பினர்.
கொள்ளையர்கள் சென்ற பின்னர் உதவி கேட்டு கேசவன் குரல் எழுப்பினார். பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள்வந்து கட்டை அவிழ்த்து விட்டனர். ரூ.2 லட்சம் அளவுக்கு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கேசவன்தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த வீட்டிற்கு புதிதாகப் பதவியேற்றுள்ள சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் சென்றுபார்வையிட்டார். ராஜமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.