மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்: பன்னீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டக் கல்லூரி மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்கூறினார்.

நேற்று (திங்கள்கிழமை) இரவு சுமார் 8 மணியளவில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தமாணவர்களை பன்னீர்செல்வம் சந்தித்தார்.

நடந்த சம்பவங்களைப் பற்றி ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாகச் சந்தித்து விளக்கமாகக் கேட்டறிந்தபன்னீர்செல்வம், மாணவர்களுக்கு ஆறுதலும் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மாணவர்கள் மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும். சட்டக் கல்லூரி தேர்வுகளும்தள்ளிவைக்கப்படும்.

காயமடைந்த மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தாக்குதல் நடத்திய போலீசார் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, சட்டக் கல்லூரிமாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பும் அளிக்கப்படும் என்றார் பன்னீர்செல்வம்.

அவருடன் அமைச்சர்கள் செம்மலை, பொன்னையன், ஜெயக்குமார் ஆகியோரும் காயமடைந்த மாணவர்களைச்சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+