ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் 200 வக்கீல்கள் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலீஸாரால் தாக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றுசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியிடம் 200க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மனுகொடுத்துள்ளனர்.
அம்மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
போலீசாரால் சட்டக்கல்லூரி மாணவர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். இது கண்டனத்துக்குரியது.
தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காயமடைந்த மாணவர்களுக்குஇழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் கோரியிருந்தனர்.
வழக்கறிஞர் பிரபாகரன் தலைமையில் கையெழுத்திட்டுள்ள 200 வக்கீல்களின் கோரிக்கை அடங்கிய மனு நீதிபதிசுபாஷன் ரெட்டியிடம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications