பொடோ சட்ட மசோதாவை கிழித்து எறிந்த எதிர்க் கட்சியினர்
டெல்லி:
சவப் பெட்டி ஊழல் தொடர்பாக விவாதம் நடத்தாமல் பொடோ சட்டம் குறித்த மசோதாவை உள்துறை அமைச்சர்அத்வானி லோக்சபாவில் தாக்கல் செய்ததையடுத்து அந்த சட்ட மசோதாவின் நகலை எம்.பிக்கள் கிழித்துஎறிந்தனர்.
பொடோ சட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இந் நிலையில் இன்று கார்கில் சவப்பெட்டி ஊழல் அம்பலமானது. இது குறித்து எதிர்க் கட்சிகளுக்கும் பா.ஜ.க. எம்.பிக்களுக்கும் மோதல்ஏற்பட்டதையடுத்து லோக்சபா பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இதன் பின்னர் 12 மணிக்கு அவை கூடியதும் மீண்டும் சவப் பெட்டி ஊழல் பிரச்சனை வெடித்தது. ஆனால், அதைக்கண்டுகொள்ளாமல் பொடோ சட்ட மசோதாவை அத்வானி தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவின் நகல்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டன.
இதையடுத்து சமாஜ்வாடிக் கட்சியின் எம்.பி. எழுந்து பாதுகாப்புத்துறையில் ஊழல் செய்யும் இந்த அரசு இப்போதுமக்கள் விரோத சட்டத்தை வேறு கொண்டு வருகிறதா என்று கூறியவண்ணம் அந்த சட்ட மசோதாவின் நகல்களைகிழித்து எறிந்தார்.
இதற்கு பா.ஜ.கவினர் எதிர்ப்புத் தெரிவிக்க, இரு தரப்பினரும் கூச்சலிட்டனர். எதிர்க் கட்சியினர் அவையின்மையத்தின் கூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சபையை மீண்டும் நாள் முழுவதும் ஒத்தி வைக்க வேண்டிய நிலைக்கு சபாநாயகர் பாலயோகிதள்ளப்பட்டார். இதே நிலை தான் ராஜ்யசபாவிலும் ஏற்பட்டது. இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இதையடுத்து அவையை மீண்டும் அமைதியாக நடத்தவும், அவையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள சிலர் வரம்பு மீறிநடந்து கொண்டது குறித்து விவாதிக்கவும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை பாலயோகி கூட்டினார்.அந்தக் கூட்டம் மாலை வரை நீடித்தது.
அவை ஒத்தி வைக்கப்பட்ட பின் வெளியே வந்த முலாயம் சிங், இந்தப் போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்றுஅறிவித்தார்.
நாளை மீண்டும் பொடோ சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications