நக்கீரன் நிருபர் ஜாமீன் மனு தள்ளுபடி
மைசூர்:
கர்நாடகப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தின் ஜாமீன் மனு தள்ளுபடிசெய்யப்பட்டது.
வெள்ளி திருப்பூர் போலீஸ் நிலையத்தை வீரப்பன் கூட்டாளிகள் தாக்கிய சம்பவத்தில் நிருபர்சிவசுப்பிரமணியத்துக்குத் தொடர்பு இருப்பதாக கர்நாடக போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் துப்பாக்கி மற்றும் குண்டுகளை காட்டுப் பகுதியிலிருந்து மீட்டதாக கோர்ட்டில்எப்.ஐ.ஆர். தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே சிவசுப்பிரமணியம் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் விடுதலையாகி வந்தஅவரை வேறொரு வழக்கு தொடர்பாக மீண்டும் கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து மீண்டும் சிவசுப்பிரமணியம் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதுவிசாரணை நடத்திய நீதிபதி தேவராஜ்பட், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனை இன்னும் அதிரடிப் படை போலீசார் தேடி வேட்டையாடி வருகிறார்கள். இந்த வழக்குமிகவும் நுணுக்கமானது. வீரப்பனுடன் சிவசுப்பிரமணியத்துக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.எனவே அவரை ஜாமீனில் விடுதலை செய்ய முடியாது என்று நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
இதையடுத்து சிவசுப்பிரமணியம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.