காஷ்மீர் தேர்தல்: பாகிஸ்தானுக்கு வாஜ்பாய் எச்சரிக்கை
டோக்கியோ (ஜப்பான்):
காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் நடக்கவிருக்கும் தேர்தலின்போது, அங்கு தீவிரவாதத்தை ஏவி விட்டால்கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய்.
விரைவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. அப்போது வாக்களிக்கவுள்ள மக்களுக்குபாகிஸ்தான் எந்தவிதமான பிரச்சனையையும் கொடுக்கக் கூடாது என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
காஷ்மீர் மக்களும் பயமில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வந்து வாக்களிப்பதற்கு வசதியாக பாகிஸ்தான் தன்தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அந்நாடு கடும் விளைவுகளைச் சந்திக்கநேரிடும்.
காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வேண்டும் என்றுதான் நட்பு ரீதியிலான நாடுகள் எல்லாம்விரும்புகின்றன. ஜப்பான் பிரதமரும் என்னிடம் அதுபோலத்தான் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், பாகிஸ்தானுடன் பேச்சு நடத்திய போதெல்லாம் இந்தியா கசப்பான அனுபவங்களையே சந்தித்துவந்துள்ளது. எனவே இப்போதைக்கு மீண்டும் பேச்சு நடத்த வேண்டிய சூழ்நிலை ஒன்றும் காணப்படவில்லைஎன்றார் வாஜ்பாய்.












Click it and Unblock the Notifications