நீதி விசாரணை முடிந்த பிறகே போலீசார் மீது நடவடிக்கை - பன்னீர்
சென்னை:
சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷன்அளிக்கும் அறிக்கையைப் பொறுத்தே போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் மாணவர்கள் மீதுபோடப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் பெறப்படுவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்கூறியுள்ளார்.
சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று நேற்று (திங்கள்கிழமை)இரவு நிருபர்களிடம் பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.
ஆனால் இன்று அவர் மீண்டும் நிருபர்களிடம் பேசுகையில்,
இதுதொடர்பாக உறுதி மொழி எதுவும் தரப்படவில்லை. சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடத்தியதாக்குதல் சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்.
அந்த விசாரணை கமிஷனின் அறிக்கை 2 அல்லது 3 மாதத்தில் வெளியாகும்.
அதன் பிறகு அந்த அறிக்கையின் அடிப்படையில் மாணவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்தும்போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் முடிவெடுக்கப்படும் என்றார் பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications