For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உண்ணாவிரதப் போராட்டம நடத்திய 33 சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கல்லூரி வாசலின் முன் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய 33 சென்னை சட்டக் கல்லூரிமாணவர்களை இன்று (புதன்கிழமை) காலை போலீசார் கைது செய்தனர்.

சட்டக் கல்லூரி மாணவர் விடுதிக்குள் புகுந்து போலீசார் தாக்கியதைக் கண்டித்து, கடந்த ஐந்து நாட்களாக டாக்டர்அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிலிருந்து சட்டக் கல்லூரி வாசலில் அமர்ந்து மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

வாசலில் அமர்ந்து போராடக் கூடாது என்று கல்லூரி முதல்வர் கூறிய பிறகும் மாணவர்கள் அங்கிருந்து கலைந்துபோகாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, போலீசாரை அழைத்த கல்லூரி முதல்வர் கல்லூரி வாசலிலிருந்து மாணவர்களைஅப்புறப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

விரைந்து வந்த போலீசார், கல்லூரி வாசலின் முன் அமர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மாணவர்களைஅப்புறப்படுத்த முயற்சித்தனர்.

ஆனால் மாணவர்கள் எழுந்து செல்ல மாட்டோம் என்று கூறி கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து, 33மாணவர்களைப் போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் கல்லூரி வாசலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஒரு மண்டபத்தில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கைதைக்கண்டித்து கைதான மாணவர்கள் அங்கேயும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

"எங்களைக் கைது செய்தாலும் நாங்கள் போராட்டத்தைத் தொடருவோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை நாங்கள் எதுவும் சாப்பிடப் போவதில்லை" என்று அம்மாணவர்கள் கூறினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X