தாக்குதலை கண்டிக்கிறதாம் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடந்துள்ள தீவிரவாதிகளின் தாக்குதலைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளதாகபாகிஸ்தான் கூறியுள்ளது.
அதே போல பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட காஷ்மீர் தீவிரவாத அமைப்புகள் தங்களுக்கும் இந்தத்தாக்குதலுக்கும் தொடர்பில்லை என மறுத்துள்ளன.
வாஜ்பாயின் ரம்ஜான் விருந்து ரத்து:
இந்தத் தாக்குதலையடுத்து தனது வீட்டில் ஏற்பாடு செய்திருந்த ரம்ஜான் இப்தார் விருந்து நிகழ்ச்சியை பிரதமர்வாஜ்பாய் ரத்து செய்துவிட்டார்.
தாக்குதலில் இறந்த பாதுகாப்புப் படையினருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் இந்த விருந்து ரத்துசெய்யப்பட்டுள்ளது.
கருப்புப் பூனைப் படை வேஷத்தில் வந்தனர்:
தீவிரவாதிகள் காரின் சிவப்பு விளக்கையும் சைரனையும் சுழல விட்டுக் கொண்டு கமாண்டோக்களின் கருப்புஉடையில் தான் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 25 முதல் 30வயதுக்குட்பட்டவர்கள்.
நீட்டாக ஷேவ் செய்து கொண்டு ராணுவத்தினரைப் போலவே இருந்த இவர்களை பாதுகாப்புப் படையினர்உடனடியாக அடையாளம் தெரிந்து கொண்டு தாக்கியதால் தான் பெரும் அளவிலான உயிர்ச் சேதம்தவிர்க்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைத் தாக்க முலாயம் கோரிக்கை:
இந்தியாவின் மானத்துடன் விளையாடியுள்ளது பாகிஸ்தான். எனவே, அவர்களது ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியில்இந்தியா தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்க வேண்டும் என சமாஜ்வாடிக் கட்சித் தலைவர்முலாயம் சிங் யாதவ் கோரினார்.
அதே போல ராணுவத்துக்கு நவீன ஆயுதங்களை வாங்கித் தர வேண்டும் என்றார்.
இத் தாக்குதலில் யாதவின் காரும் சேதமடைந்தது.