For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இன்று (வியாழக்கிழமை) காலை நாடாளுமன்றம் தாக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து விமான நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் போலீசாரும் ராணுவத்தினரும்குவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது மேலும் பல போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியைச் சுற்றிலும் போலீசார் ரோந்து சுற்றிவருகின்றனர்.

அதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் எக்மோர் ரயில் நிலையத்திலும் போலீசார் அதிக அளவில்குவிக்கப்பட்டுள்ளனர். இங்கு வந்து செல்லும் அனைத்துப் பயணிகளும் தீவிரப் பரிசோதனைக்கு உள்ளாகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாகரோந்து சுற்றி வருகின்றனர்.

கோயம்புத்தூர் விமான நிலையத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமானபொருட்களைச் சோதித்து போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர் ரயில் நிலையம், பஸ் நிலையம், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் பல முக்கியஇடங்களிலும் போலீசார் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதேபோல், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்பட அனைத்து நகரங்களிலும் உள்ள விமான, ரயில், பஸ்நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X