பக்கவாத நோயில் வாடும் வீரப்பன்: உளவுத்துறை தகவல்

Subscribe to Oneindia Tamil

சத்தியமங்கலம்:

சந்தன கடத்தல் வீரப்பன் பக்கவாத நோயால் அவதிப்படுகிறான் என்றும், இரண்டு பேரின் துணையுடன்தான்நடக்கிறான் என்றும் உளவுத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் வீரப்பனைப் பிடிக்க கர்நாடக,தமிழக அதிரடிப் படைகள் ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையே வீரப்பனின் நடவடிக்கையை கண்காணிக்கும் பணியில் உளவுத் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து புதிய தகவல் வெளிவந்துள்ளது.

வீரப்பன் தற்போது பக்கவாத நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளான். அவனது இடது கை, கால் செயல் இழந்துபோய்விட்டது என்று உளவுத் துறையினர் கூறியுள்ளனர்.

எனவே சேத்துக்குளி கோவிந்தன் தோளில் ஒரு கையும், சந்திர கவுண்டர் தோளில் மறு கையும் போட்டபடிதான்வீரப்பனால் நடக்கமுடிகிறது என்றும் அவர்கள் கூறினர்.

இதனால் வீரப்பன் விரைவில் அதிரடிப்படையினரின் பிடியில் சிக்கிவிடுவான் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+