மாணவர்கள் மீது தாக்குதல்: வக்கீல்கள் போராட்டம்
சென்னை:
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதலை கண்டித்து, நேற்று (வியாழக்கிழமை) சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டக்கல்லூரி மாணவர்கள் வாயில் கறுப்புத்துணி கட்டி , சட்டக்கல்லூரிமுன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவிற்கு உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே மனித சங்கிலிபோராட்டத்தை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தொடங்கினர்.
சிறிது நேரத்திற்கு பின் அவ்வழக்கறிஞர்கள் சட்டக்கல்லூரி நோக்கி சென்றனர். அங்கிருந்த மாணவர்களும் மனிதசங்கிலியில் பங்கேற்க தொடங்கினர். இரு தரப்பினரையும் சேர்த்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சாலையின் ஒரத்தில் நடந்து கொண்டிருந்த போராட்டம் பிறகு சாலையை மறைத்தபடி நின்று கொண்டு, அவர்கள்போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும், வழக்கறிஞர்களையும் விடியோ கேமரா மூலம் போலீசார் படம்பிடித்தனர். இதனால் பாரிமுனை பகுதியில் அரைமணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு ஆதரவாக பேசிவிட்டு பிறகு கலைந்து சென்றனர் வழக்கறிஞர்கள்.












Click it and Unblock the Notifications