For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடாளுமன்றம் மீண்டும் கூடியது

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்த மறுதினமான இன்றே (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றம் மீண்டும் கூடியது.

முன்னதாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் லோக்சபா சபாநாயகர் பாலயோகியும், ராஜ்யசபைத் தலைவரும்துணை ஜனாதிபதியுமான கிருஷ்ணகாந்த் ஆகியோர் நாடாளுமன்றத்தில் தங்கள் அறைகளில் ஆலோசனைநடத்தினர்.

பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. அதில் தீவரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், இது போன்ற தாக்குதல்களால் இந்தியாவின் ஜனநாயகத்தைசேதப்படுத்திவிட முடியாது. ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்எனக் கூறப்பட்டிருந்தது.

தாக்குதலில் பலியான போலீசாருக்கும் நாடாளுமன்ற ஊழியருக்கும் அனைத்து எம்.பிக்களுக்கும் எழுந்து நின்று 2நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.

இதன் பின்னர் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. திங்கள்கிழமை ரம்ஜான் பண்டிக்கை விடுமுறை என்பதால்,நாடாளுமன்றம் மீண்டும் செவ்வாய்க்கிழமை கூடும்.

இன்று நாடாளுமன்றத்துக்கு துணை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள்,அனைத்து எம்.பிக்களும் வந்திருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X