வாஜ்பாய்தான் தீவிரவாதிகளின் இலக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பிரதமர் வாஜ்பாயைக் குறிவைத்துத்தான் நேற்று (வியாழக்கிழமை) தீவிரவாதிகள் நாடாளுமன்றத்துக்குள்புகுந்ததாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்றைய நாடாளுமன்றக் கூட்டத்தின்போது, ராஜ்ய சபாவில் வாஜ்பாய் பேசுவதாக இருந்தது. இதை நன்றாகத்தெரிந்து கொண்டுதான் தீவிரவாதிகள் நாடாளுமன்றத்துக்குள் புகுந்துள்ளனர்.

வழக்கமாக எந்த ஒரு வி.ஐ.பியும் 12ம் எண் கேட்டைப் பயன்படுத்துவதில்லை. பிரதமர் வாஜ்பாயும் வேறுகேட்டைத்தான் பயன்படுத்துவது வழக்கம்.

இதனால் மற்ற கேட்டுகளில் கொடுக்கப்பட்டதைவிட 12ம் எண் கேட்டில் பாதுகாப்பு குறைவாகவேகொடுக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த வழியாக நாடாளுமன்றத்துக்குள் புகுந்து விடலாம் என்று தீவிரவாதிகள்நினைத்துள்ளனர்.

இதனால் மெயின் கேட் வழியாக தீவிரவாதிகள் புகுந்த போதிலும் 12ம் எண் கேட்டை நெருங்கும் வரை யார் மீதும்அவர்கள் தாக்குதலை நடத்தவில்லை. இந்த கேட்டை அடைந்தவுடன்தான் தங்களைத் தடுத்த பெண் போலீசாரைஅவர்கள் முதன் முதலில் சுட்டுக் கொன்றனர்.

இந்த வழியாக எளிதில் கட்டடத்துக்குள் புகுந்து ராஜ்யசபாவில் உரையாற்றும் வாஜ்பாயைத் தாக்க வேண்டும் என்றுஅவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் அதற்குள் பாதுகாப்புப் படையினர் முழு வேகத்தில் செயல்பட்டு, தீவிரவாதிகளை உள்ளே செல்ல விடாமல்தடுத்து, வெளியிலேயே சுட்டுக் கொன்று விட்டனர்.

12ம் எண் கேட்டில் நிச்சயம் பாதுகாப்பு குறைவாகத்தான் இருக்கும் என்று தீவிரவாதிகளுக்கு நன்றாகத்தெரிந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் உள்ள இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி தீவிரவாதிகளுக்குத் தெரிந்தது என்றுதான்இப்போது பாதுகாப்பு அதிகாரிகள் குழம்பிப் போயுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+