இனிமேல் ஜெயாவுக்கு ஜெயமே கிடையாது: வாழப்பாடி
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:
இனி எந்தத் தேர்தலிலும் ஜெயலலிதாவால் வெற்றி பெறவே முடியாது என்று தமிழக ராஜீவ் காாங்கிரஸ் தலைவர்வாழப்பாடி ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நடைபெற இருக்கும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா தோற்பது உறுதி. இத்தேர்தலில் மட்டுமல்ல.அவரால் இனி எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறவே முடியாது.
பொடோ சட்டத்தை ஏற்படுத்துவதற்கு முன் பிரதமர் அனைத்து கட்சிகளின் ஆலோசனையை கேட்டறிந்திருக்கவேண்டும். அப்படி கேட்காததாலேயே அனைத்து கட்சியும் அதனை எதிர்க்கின்றன. பொடோவைப் பற்றி சரியானவிளக்கம் அளிக்கப்படவில்லை.
சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதற்குக் காரணமான போலீசாரை கடுமையாக தண்டிக்க வேண்டும்என்றார் வாழப்பாடி.












Click it and Unblock the Notifications