For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத் தாக்குதல்: தீவிரவாதிகளுடன் பெங்களூர் மாணவனுக்குத் தொடர்பு

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

நாடாளுமன்றத்தை தாக்க பயன்படுத்திய காரை வாங்கியதாக காஷ்மீரில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவன்பெங்களூரில் படித்துவருவதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்கியதை தொடர்ந்த பல பேர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.தீவிரவாதிகள் பயன்படுத்திய காரை வாங்கியவர்கள் என்று இரண்டு பேரை காஷ்மீர் போலீசார் கைது செய்தனர்.

இரண்டு பேரின் பெயரும் ஆஷிக் உசேன் கான். அவர்களில் ஒருவன் கேபிள் ஆபரேட்டர் என்றும்,இன்னொருவன் பெங்களூரில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதைப்பற்றி கர்நாடகா டி.ஜி.பி. வி.வி.பாஸ்கர் கூறுகையில், பெங்களூர் நகர போலீசாரும் கர்நாடக மாநில உளவுத்துறையினரும் விசாரணையில் இறங்கியுள்ளன என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X