காட்டிக் கொடுத்த செல்போன்கள்
டெல்லி:
செல்போன்களில் தீவிரவாதிகள் நடத்திய பேச்சுக்கள் தான் இதுவரை கிட்டத்தட்ட 12 பேரை கைது செய்யஉதவியுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட 6 தீவிரவாதிகளும் வியாழக்கிழமை காலை (தாக்குதல் நடந்த தினத்தன்று) தான்காஷ்மீரிலிருந்து டெல்லி வந்து சேர்ந்துள்ளனர். ஜூம்மா மசூதி பகுதியில் சிறிது நேரம் தங்க வைக்கப்பட்டஇவர்களிடம் தயாராக வைக்கப்பட்டிருந்த அம்பாசிடர் கார் தரப்பட்டது. வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், உணவுப்பொருள்களும் தரப்பட்டன.
5 செல்போன்களும் தரப்பட்டன. காலை 11 மணிக்குள் இந்த செல்போன்கள் மூலம் தீவிரவாதிகள் 152 முறைபேசியுள்ளனர். காஷ்மீர், மும்பை, ராஜஸ்தான், டெல்லி ஆகிய இடங்களில் இருந்தவர்களுடன் இவர்கள்பேசியுள்ளனர்.
பின்னர் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற இவர்களை வழியிலேயே மறித்து போலீசார் சுட்டுக்கொன்றுவிட்டனர். இவர்களிடம் இருந்த செல்போன்களையும் போலீசார் கைப்பற்றிவிட்டனர். இந்தசெல்போன்களின் சிம் கார்டுகளில் பதிவாகியிருந்த எண்களை வைத்துத் தான் இதுவரை 12 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
இவர்கள் பேசிய நபர்களில் டெல்லி பல்கலைக்கழக் போராசிரியர், 2 பெண்களும் அடக்கம். இதில் பேராசிரியர்கைது செய்யப்பட்டுவிட்டார். இரு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இச் சம்பவத்தில் மேலும் சுமார் 10 பேருக்குத் தொடர்பிருப்பதையும் செல்போன்கள் காட்டிக் கொடுத்துள்ளன.