மீனவர் குப்பங்கள் இடையே பெரும் மோதல்: 30 பேர் காயம்
கடலூர்:
மீனவர் கொலை தொடர்பாக இரண்டு மீனவர் குப்பங்களுக்கிடையே கடும் மோதல் நடந்தது. இதுதொடர்பாக30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் பெரியாம்பட்டனம் மற்றும் சின்னப்பட்டனம் என்று இரண்டு கிராமங்கள் உள்ளது.எப்போதும் இந்த இரண்டு மீனவர் கிராமங்களுக்கும் இடையே மோதல் நடப்பது வாடிக்கை. இது சில சமயங்களில்பெரும் கலவரமாகவும் மாறும்.
இந்த நிலையில் சோத்திக்குப்பம் என்ற பகுதியின் கடற்கரையில் அதியமான் என்ற மீனவரின் உடல் கரைஒதுங்கியது. இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். இவரை சிலர் கொன்று விட்டு கடலில் வீசியுள்ளனர். இது குறித்துத்தகவல் அறிந்ததும் பெரியாம்பட்டனம் மற்றும் சின்னப்பட்டனம் குப்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானமீனவர்கள் அதியமான் உடலைப் பார்ப்பதற்காக சோத்திக்குப்பம் கடற்கரைக்கு வந்தனர்.
அங்கு இரு குப்பங்களையும் சேர்ந்த மீனவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கத்தி,கம்புகளால் தாக்கிக் கொண்டனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். 37 பேரை கைதுசெய்தனர்.












Click it and Unblock the Notifications