உண்ணாவிரதத்தை கைவிட கருணாநிதி கோரிக்கை
சென்னை:
சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை உடனே கைவிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதிகோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதலை கண்டித்தும், தாக்கிய போலீசார் மீது நடவடிக்கைஎடுக்குமாறும், மாணவர்கள் தொடர்ந்து 6வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று (சனிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சட்டக்கல்லூரி மாணவர்கள் 6 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால் பல மாணவர்களும்மயங்கி விழுந்து வருகின்றனர். தமிழக அரசோ அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற முன் வருவதாகதெரியவில்லை. அதனால் மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்.
மாணவர்கள் மீதான இந்த தாக்குதல் மிக கண்டிக்கத் தக்கது. போலீசார் மீது தமிழக அரசு விரைவில் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றும் கருணாநிதி அந்த அறிக்கையில் கூறயுள்ளார்.












Click it and Unblock the Notifications