For Quick Alerts
For Daily Alerts
Just In
அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கும்: இந்திய கம்யூ.
சென்னை:
அதிமுகவுடனான கூட்டணி வரும் இடைத் தேர்தலிலும் நீடிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து அரசுக்கு எதிரானகருத்துக்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்து வந்தன. அதிமுக அரசுக்கு எதிராக போராட்டமும் நடத்தின.
மேலும், தமிழக அரசின் விலைவாசி உயர்வு அறிவிப்பைக் கண்டித்தும் கடந்த 7ம் தேதி எதிர்க்கட்சிகளுடன்சேர்ந்து பந்த் நடத்தின.
அதனால் அதிமுக அரசுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் பிளவு உண்டாவதை போல் தெரிந்தது. இதற்குமுற்றுபுள்ளி வைக்கும் வகையில் இடது கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில், வரும் இடைத் தேர்தலிலும் அதிமுக, கம்யூனிஸ்ட் கூட்டணி நீடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]