ஒன்று கூடி தீவிரவாதத்தை ஒழிப்போம்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாட்டு மக்கள் அனைவரும் மத்திய அரசுடன் சேர்ந்து தீவிரவாதத்தை ஒழிக்க போராட வேண்டும் என்று திமுகதலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்றம் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலை பற்றி திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சிலர் அரசு முறையான பாதுகாப்பு அளிக்கவில்லைஎன்று குற்றம் சாட்டுகின்றனர்.
முறையான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றால் அன்று மிக பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும்.நாடாளுமன்றத்தில் முறையான பாதுகாப்பு இருந்ததாலேயே தீவிரவாதிகளின் தாக்குதலை உடனடியாக முறியடிக்கமுடிந்தது.
நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று கூடி அரசுடன் சேர்ந்து தீவிரவாதத்தை எதிர்க்கவேண்டும் என்று அந்தஅறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications