For Daily Alerts
Just In
தமிழகத்தில் மழை
சென்னை:
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைபெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
இது மேலும் வலுப்பெற்று மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமானது முதல் சற்றே பலமான மழை பெய்யக்கூடும் என்றுவானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments
Story first published: Thursday, May 24, 2001, 5:30 [IST]