பெங்களூர்-சேலம் ரயில்களில் குண்டு வைப்போம்: அல்-உம்மா மிரட்டல்
தர்மபுரி:
மதானியை விடுதலை செய்யாவிட்டால் பெங்களூரில் இருந்து சேலம் செல்லும் ரயில்களை குண்டு வைத்துத்தகர்ப்போம் என்று அல்-உம்மா இயக்கத்தினர் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர்.
தர்மபுரி ரயில்வே அதிகாரிக்கு வந்த தபால் கார்டில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
கோயம்புத்தூரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானி மற்றும் பாட்ஷா ஆகியோரை உடனே விடுதலை செய்யவேண்டும். இன்னும் 40 நாட்களுக்குள் விடுதலை செய்யாவிட்டால் பெங்களூரில் இருந்து சேலம் செல்லும்ரயில்களை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்போம், இப்படிக்கு அல்-உம்மா என்று அந்தக் கார்டில் எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து ரயில்வே போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தர்மபுரிக்கு வரும் ரயில் பயணிகள் கடுமையானபரிசோதனைக்குப் பின்னரே ரயிலில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
பெங்களூர்-தர்மபுரி-சேலம் மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களிலும் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது.