சட்ட மாணவர்களுக்கு கருணைத் தொகை வழங்க நால்வர் குழு பரிந்துரை
சென்னை:
போலீஸாரால் தாக்கப்பட்ட சென்னை அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு கருணைத் தொகை வழங்க வேண்டும்என்று உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நால்வர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த வழக்கில் மாணவர்கள் பிரச்சினை தொடர்பாக விசாரித்து அறிக்கை தருமாறு முன்னாள் டிஜிபி லட்சுமிநாராயணன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது.
இந்தக் குழுவினர் மாணவர்களிடம் விசாரணை நடத்தி இன்று அறிக்கை சமர்ப்பித்தனர். அதில் பாதிக்கப்பட்டமாணவர்களுக்கு கருணைத் தொகை வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரை குறித்து அரசு வழக்கறிஞர் என்.ஆர். சந்திரனிடம் கூறி, இதன்படிகருணைத் தொகை வழங்க அரசு முன்வருமா என்று நீதிபதிகள் சுபாஷன் ரெட்டியும் சிவசுப்ரமணியனும் கேட்டனர்.
அரசிடம் கலந்து ஆலோசித்த பிறகே இதுகுறித்து பதிலளிக்க முடியும் என்றார் சந்திரன். இதைத் தொடர்ந்துநாளைக்கு இந்த வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்த நிலையில் நால்வர் குழு பரிந்துரையையடுத்து சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்களது காலவரையற்றஉண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளனர். இருப்பினும் தற்காலிகமாகவே வாபஸ் பெற்றிருப்பதாகஅவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications