தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ராமேஸ்வரம்:
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி,வலைகளைக் கிழித்தெறிந்தனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சில மீனவர்கள் 30 இயந்திரப் படகுகளில் சென்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்று கொண்டிருந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளைவழிமறித்து தாக்குதல் நடத்தினர்.
வானை நோக்கி மூன்று ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டு, 30 படகுகளையும் நிறுத்தச் செய்தனர் இலங்கைகடற்படையினர். பிறகு மடமடவென்று மீனவர்களின் படகுகளில் இறங்கி, அங்கிருந்த பொருட்களை சூறையாடஆரம்பித்தனர்.
அவர்கள் தாக்குதலில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகளைத் தாறுமாறாகக் கிழித்தெறிந்து விட்டுச்சென்றனர்.
போவதற்கு முன், கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் வந்து மீன் பிடிக்கக் கூடாது என்றும் எச்சரித்து விட்டுச்சென்றனர்.












Click it and Unblock the Notifications