மதுரையில் கார்-பஸ் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் இன்று (புதன்கிழமை) அதிகாலை காரும் டவுண் பஸ்சும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
மதுரை அருகே உள்ள சோழவந்தானில் இருந்து இன்று அதிகாலை ஒரு கார் மதுரைக்கு வந்தது.
மதுரை ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த டவுண் பஸ் ஒன்று இந்தக்காரின் மீது பயங்கரமாக மோதியது.
இதனால் காரின் முன் பகுதி நொறுங்கியது. காருக்குள் இருந்த ராஜேஷ் மற்றும் அருள் விமலானந்தம் ஆகியோர்சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த மூன்று பேர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications