ஜஸ்வந்த் சிங்குடன் காலின் பாவல் பேச்சு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்த ஆரம்பித்துள்ளது.

நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பின்னரும் இந்தியாவுக்கு மட்டுமே அறிவுரை கூறி வந்த அமெரிக்காவுக்கு எதிராகபிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

மேலும் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி தரப்படும் எனவும் கூறியுள்ளனர். இதையடுத்து இந்தியவெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் நேற்றுமாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை நாங்கள் வலியுறுத்தப் போகிறோம் எனஉறுதியளித்தார்.

இந் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பெளச்சர் கூறுகையில்,

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை அந் நாட்டுக்குஉள்ளது.

பாகிஸ்தான் அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தைஒழிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதன் அண்டை நாடான பாகிஸ்தானிலும் தீவிரவாதிகளைஒழித்துக் கட்ட வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கா உணர்ந்துள்ளது.

பாகிஸ்தான் அரசு தனது கடமையை உணர்ந்து செயல்படும் என நம்புகிறோம். இந்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங்குடன் காலின்பாவல் பேசியுள்ளார். இந்தியா, பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதர்களுடனும் பேச்சுநடத்தியுள்ளார்.

இச் சம்பவம் குறித்து இந்தியா முழுமையாக விசாரிக்க வேண்டும். தனது மக்களையும், ஜனநாயகத்தையும் காக்கும்உரிமை இந்தியாவுக்கு உள்ளது. அதற்குத் தேவையான நடவடிக்கைளையும் இந்தியா எடுக்க உரிமை உண்டுஎன்றார்.

ரிச்சர்ட் பெளன்சரின் இந்தப் பேச்சு தனது பாகிஸ்தான் ஆதரவு நிலையில் இருந்து அமெரிக்கா கொஞ்சம் இறங்கிவந்திருப்பதைக் காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+