காஷ்மீரில் நடப்பது சுதந்திரப் போர்: பாக். மீண்டும் திமிர்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் எனக் கூறிக் கொண்டு எங்களைத் தாக்கஇந்தியா முயல்கிறது என அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் கூறினார்.
காஷ்மீர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தானைக் குற்றம் சாட்டி வரும் இந்தியா, இதைகாரணமாக வைத்து எங்களைத் தாக்க முயல்கிறது. இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
இத் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணை வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக்கவுன்சிலின் உதவியை இந்தியா நாட வேண்டும் என்றார் சத்தார்.












Click it and Unblock the Notifications