For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் படைகளைக் குவிக்கிறது: இந்திய ராணுவத் தளபதி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

எல்லையில் பாகிஸ்தான் படைகளைக் குவித்து வருகிறது. இதற்கு பதிலடியாக என்ன செய்ய வேண்டுமோ அதைசெய்வோம் என இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் பத்மநாபன் கூறினார்.

டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் தனது படைகளைக் குவித்து வருகிறது. இதை நமது படைகள்தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. பாகிஸ்தானின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டு தான்இருக்கிறோம்.

பாகிஸ்தான் தரப்பிலிருந்து சில படைப் பிரிவுகள் குவிக்கப்பட்டுள்ளன. எல்லையில் இருந்து கலைந்து போயிருக்கவேண்டிய சில படைகள் அங்கேயே நிற்கின்றன.

நாமும் படைகளைக் குவித்துத் தான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அதே நேரத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை நான் வெளியில் சொல்ல மாட்டேன். என்ன செய்யவேண்டும் என ராணுவத்துக்குத் தெரியும்.

நாம் பாகிஸ்தான் மாதிரி கோஷம் போடும் ராணுவம் அல்ல. நம்முடையது நம்பிக்கை மிகுந்த ராணுவம்.பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கப் போகிறோமா என்பதை உங்களிடம் சொல்ல மாட்டேன்என்றார்.

பாகிஸ்தானைத் தாக்க அரசியல்ரீதியில் ராணுவத்துக்கு நெருக்குதல் தரப்படுகிறதா என்று கேட்டபோது, நான்அரசியல் பேசுவதில்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X