Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிள்ளையார் சிலைகளுக்கு செருப்பு மாலை: பழனியில் பதட்டம்

Subscribe to Oneindia Tamil

பழனி:

பழனியில் பிள்ளையார்சிலைகளுக்கு யாரோ செருப்பு மாலைகளை அணிவித்ததையடுத்து, அங்கு பெரும்பதட்டமும் பரபரப்பும் நிலவி வருகிறது.

பழனி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அரசமர பிள்ளையார் சிலைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை)அதிகாலை யாரோ செருப்பு மாலையை வீசி விட்டுச் சென்றுள்ளனர்.

அருகில் கிடந்த ஒரு சிகரெட் அட்டையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று வாசகம்எழுதப்பட்டிருந்தது.

இது தவிர, பழனியின் பல்வேறு இடங்களிலும் உள்ள பிள்ளையார் சிலைகளுக்கும் செருப்பு மாலைகள்அணிவிக்கப்பட்டிருந்தன.

"தமிழக அரசே, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடை செய்; இல்லையேல் பழனியைக் குண்டு வைத்துத் தகர்ப்போம்"என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் அந்தச் சிலைகளைச் சுற்றிக் கிடந்தன.

இதையடுத்து, பழனி நகரப் பொதுமக்கள் திரண்டு வந்து இச்சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கினர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்சுகளுக்கு பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பிள்ளையார் சிலைகளுக்கு யார் செருப்பு மாலைகளை அணிவித்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+