தலைமை ஆசிரியரை மொட்டை அடித்து அவமானப்படுத்திய கும்பல்
கமுதி:
சில மாதங்களுக்கு முன் உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட பிரச்சனையின் தொடர்ச்சியாக ஒரு தலைமைஆசிரியரை பள்ளியில் இருந்து இழுத்துச் சென்று மொட்டை அடித்து அவமானப்படுத்தியுள்ளது ஒரு கும்பல்.
கமுதி ஊராட்சி ஒன்றியத்தின் 17வது வார்டுக்கு நடந்த தேர்தலில் போஸ் என்பவர் வெற்றி பெற்றார். இவரதுவெற்றிக்கு மாவிளங்கையைச் சேர்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கருத்தராமன் தான் காரணம் என்ற கோபத்தில்இருந்தது போசின் எதிர் கோஷ்டி.
அவரைப் பழிவாங்கத் திட்டமிட்டிருந்த அக் கும்பல் சில தினங்களுக்கு முன் பள்ளிக்குள் நுழைந்து மாணவர்கள்முன்னிலையில் அவரை வெளியில் இழுத்து வந்தது.
பின்னர் பள்ளிக்கு வெளியில் வைத்தே அடித்துக் கொடுமைப்படுத்திய அக் கும்பல் அவருக்கு மொட்டையும்அடித்து அவமானப்படுத்தியது. தாக்கப்பட்ட அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஆசிரியரின் உறவினர்கள் அந்தக் கும்பலைத் தாக்க முயற்சிகளில் இறங்கியுள்ளதால் அங்கு பெரும்பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications