அமெரிக்காவின் அறிவுரையும், உதவியும் தேவையில்லை: வாஜ்பாய்
டெல்லி:
தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட யாருடைய உதவியும் இந்தியாவுக்குத் தேவையில்லை, அமெரிக்காவின்அறிவுரைகளும் இந்தியாவுக்குத் தேவையில்லை என பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
கார்கில் ஊடுருவலின்போது பாகிஸ்தானுடன் கிட்டத்தட்ட போர் தான் நடத்தினோம். அந்த பதிலடித் தாக்குதலைநாம் நடத்தியிருக்காவிட்டால் நாட்டுக்கு பெரும் தீங்கு நேர்ந்திருக்கும். இப்போது மீண்டும் பெரிய அளவிலானபோருக்கு தேசம் தள்ளப்பட்டால் என்ன செய்ய முடியும்?. எதையும், யாரையும் சமாளிக்கும் திறனும் பலமும்இந்தியாவுக்கு உண்டு.
நாம் அமைதியாக இருக்க வேண்டும் என சில நாடுகள் அறிவுரை கூறுகின்றன. அவர்கள் அறிவுரை கூறவேண்டியது நமக்கல்ல. நமது அண்டை நாட்டுக்குத் தான். தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட யாருடையஉதவியையும் இந்தியா எதிர்பார்க்கவில்லை.
ஆனால், அதே நேரத்தில் சர்வதேச அளவில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாகக் கூறிக் கொள்ளும் சிலநாடுகள் இந்தியா மீதான தாக்குதை கண்டுகொள்ளாமல் இருப்பது அவர்கள் இரட்டை வேடம் போடுவதைத் தான்காட்டுகிறது.
இந்தியா மீது இப்படி ஒரு தாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும் என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும். எல்லாம்தெரிந்து தான் அவர்கள் இத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் எதிர்பார்ப்பதைவிட மிக மோசமான வகையில் நமது பதிலடி இருக்கும் என்பதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.