ஜெயிலில் உள்ள ராஜகோபால் கூட்டாளியிடம் செல்போன்!
சென்னை:
சரவணபவன் அதிபர் ராஜகோபாலுக்கு அடைக்கலம் கொடுத்தது உட்பட பல வழக்குகளிஸ் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ள ரெளடி அப்புவிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜகோபாலுக்கு அடைக்கலம் கொடுத்தது உட்பட பல வழக்குகளில் ரெளடி அப்பு சம்பந்தப்பட்டுள்ளதாகபோலீசார் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.நீதிமன்றத்திலிருந்து வரும்போது அவர் யாருக்கும் தெரியாமல் தனது ஆதரவாளர்களிடமிருந்து ஒருசெல்போனைப் பெற்று, அதைச் சிறைச்சாலைக்கும் எடுத்து வந்து விட்டார்.
இந்நிலையில் அதிகாலையில் துணை ஜெயிலர் அறிவுடை நம்பி, வார்டன் துரைவேலு ஆகியோர் கைதிகளைதிடீரென சோதனையிட்டனர். அப்போது அப்புவின் அறையில் செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்புவை சிறைக்குள் கொண்டு செல்லும்போது சரியாக சோதனை செய்யாமல் இருந்ததற்காக சிறைக் காவலர்கள்வெற்றிவேல், துரையரசன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
செல்போன் இருந்ததை கண்டுபிடித்த துணை ஜெயிலர் அறிவுடை நம்பி, வார்டன் துரைவேலு ஆகியோருக்கு சிறைநிர்வாகம் பரிசு வழங்கி பாராட்டியது.












Click it and Unblock the Notifications