ஆண்டிப்பட்டியில் போட்டியிட காங்கிரஸ் முடிவு
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்இன்று (வியாழக்கிழமை) கூறினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் போட்டியிட வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் தொண்டர்களின் ஒட்டு மொத்த விருப்பமாகும்.
காங்கிரஸ் மேலிடத்திடம் எங்கள் கருத்தை நாங்கள் வலியுறுத்துவோம். இதுகுறித்து மேலிடம் எடுக்கும் எந்தமுடிவையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
ஆனாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன்தான் இதுகுறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவெடுக்கும் என்றார்இளங்கோவன்.
காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணையப் போவதில்லை என்று அதன் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளது பற்றிஇளங்கோவனிடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், காமராஜர் ஆட்சி அமைப்பதில் இரு கட்சிகளுமே உறுதியாக இருக்கிறோம். விரைவில் அவர்கள்காங்கிரசுக்குத் திரும்புவார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications