சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

போலி பாஸ்போர்ட் மூலம் பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பிய சென்னை பாஸ்போர்ட் ஏஜென்ஸி உரிமையாளர்உள்பட 3 பேரை பெங்களூர் போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

டிசம்பர் 1ம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல் நகருக்குராமநாதபுரம் தாமஸ் அந்தோணி ராஜ் என்பவரின் பெயருடைய பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு குஜராத்தில்உள்ள தங்கவாரா கிராமத்தை சேர்ந்த பாபு பாய் பாட்டீல் சென்றுள்ளார்.

அமெரிக்க பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு அந்த பாஸ்போர்ட் போலியானது என்று தெரிய வந்தது. இது பற்றிபெங்களுர் பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தகவலை அடுத்து போலி பாஸ்போர்ட் கும்பலை பிடிக்க பெங்களூர் நகர குற்றத் தடுப்பு ஏ.சி.பி. கிருஷ்ணப்பாதலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அப்படை மூன்றாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு, குஜராத், மும்பைக்குதனித்தனியாக அனுப்பப்பட்டது.

தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட போலீசார் சென்னை, திருச்சி நகரங்களில் போலி பாஸ்போர்ட் குறித்து ரகசியமாகவிசாரணை நடத்தினர். அப்போது சென்னை தம்பு செட்டி தெருவில் உள்ள ஜெ.ஆர்.கே. ஏஜென்சி என்ற நிறுவனம்போலி பாஸ்போர்ட் தயாரித்து விநியோகம் செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஏஜென்சி உரிமையாளர் ஜான்சன் என்ற ரவி (45), ஊழியர்கள் மாணிக்கம்(40), அனுகபூர் ராஜ்(43) கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 9 போலி பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட 3 பேரும் போலி பாஸ்போர்ட்கள் மூலம் மலேசியா, சிங்கப்பூர், பாங்காக் மற்றும் அரபுநாடுகளுக்கு பலரை அனுப்பியுள்ளனர்.

இந்த கும்பலின் தலைவனான மும்பையை சேர்ந்த அபர்பாய் ராஜூபாயை கைது செய்ய மும்பையில் போலீசார்முகாமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+