ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் ராஜகோபால் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஜாமீன் வழங்க சென்னை மாவட்ட முதன்னை செசன்ஸ்நீதிமன்றம் மறுத்ததையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஜீவஜோதி என்ற பெண்ணை மூன்றாவது கல்யாணம் செய்து கொள்ளவற்புறுத்துவதாக ராஜகோபால் மீது புகார் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமறைவான ராஜகோபால்காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

போலீசார் இவர் மீது மிரட்டல் மற்றும் கடத்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தது. பிறகு ஜீவஜோதியின் கணவர்சாந்தகுமார் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ராஜகோபால் மீதானவழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

இதற்கிடையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி ராஜகோபால் தாக்கல் செய்த மனுவை முதன்மை செஷன்ஸ் நீதிபதிஅசோக்குமார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ராஜகோபால் மனு தாக்கல் செய்துள்ளார். அந்தமனுவில், தான் நிரபராதி என்றும், தொழில் போட்டி காரணமாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும்,தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இம்மனு இன்று (வியாழக்கிழமை) நீதிபதி கனகராஜ் முன்பு விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+