இந்திய ராணுவமும் குவிப்பு: எல்லையில் பதற்றம் அதிகரிக்கிறது

Subscribe to Oneindia Tamil

ஜம்மூ:

காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து ராணுவத்தினரையும் ஆயுதங்களையும் குவித்து வருவதால்,இந்தியாவும் கூடுதல் படைகளைக் குவிக்க ஆரம்பித்துள்ளது.

நேற்று பஞ்சாப் எல்லையில் ராணுவத்தைத் தயார் நிலைக்குக் கொண்டு வந்த இந்தியா, நேற்றிரவு முதல் ஜம்மூ,கதுவா, பதான்கோட் ஆகிய முக்கிய இடங்களிலும் ஆயுதங்களைக் குவிக்க ஆரம்பித்துள்ளது.

இதனால் எல்லையில் பதற்றம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலும் சர்வதேசஎல்லைப் பகுதியும் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.

எதற்கும் தயார் நிலையில் இருக்குமாறு இந்தியப் படைகளுக்கு உத்தரவு பறந்துள்ளது.

கார்கிலை மீண்டும் தாக்கத் திட்டம்:

தீவிரவாதிகளின் உதவியுடன் கார்கிலை மீண்டும் தாக்க பாகிஸ்தான் தயாராகி வருவதாகவும் இந்திய ராணுவம்கருதுகிறது. முதலில் பூஞ்ச், ரஜெளரி ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்திவிட்டு பின்னர் கார்கிலைத் தாக்கபாகிஸ்தான் முயல்கிறது.

இத் தாக்குதல்களை தீவிரவாதிகளைக் கொண்டே நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு கார்கில் பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் ஊடுருவினர். அவர்களை இந்திய ராணுவம்விரட்டியடித்தது. அந்த ஊடுருவலை அப்போது பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப் தான்திட்டமிட்டு நடத்தினார்.

இப்போது தானே அதிபராகிவிட்ட நிலையில் மீண்டும் இந்தப் பகுதியைத் தாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக கார்கிலில் வசிக்கும் ஷியா இனத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதஇயக்கங்களில் சேரச் செய்யும் முயற்சிகளில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இங்குள்ள சிறியமதரஸாக்களில் (இஸ்லாமிய பள்ளிகள்) பாகிஸ்தான் ஆதரவு போதனைகள் போதிக்கப்பட்டு வருவதையும்ராணுவம் கண்டறிந்துள்ளது.

சமீபத்தில் இந்தப் பகுதியில் பெரும் அளவிலான பாகிஸ்தான் ஆயுதங்களும் கைப்பற்ற்றப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+