டெல்லியில் மேலும் தீவிரவாதிகள் ஊடுவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் மேலும் பல தீவிரவாதக் குழுக்கள் ஊடுருவி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மத்திய டெல்லியில் உள்ள காவல்துறையில் சிறப்பு செல்லில் இவர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களிடம் தொடர்ந்து மத்திய உளவுப் பிரிவினரும், ராணுவ உளவுப் பிரிவினரும் விசாரணை நடத்திவருகின்றனர்.
அப்போது இவர்கள் கூறிய விவரம் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது. நாடாளுமன்றத்தைத் தாக்க வந்ததைப் போலமேலும் பல சிறு சிறு தீவிரவாதக் குழுக்களும் டெல்லிக்குள் வந்துள்ளதாகவும், இவர்களிடமும் துப்பாக்கிகள்,கிரனைட்கள், ஏகப்பட்ட பணமும் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இக் குழுக்கள் முக்கிய இலக்குகளைத் தாக்க முயலலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இக் கும்பல்களை சுற்றிவளைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications